Monday 29 September 2014

78.2% பஞ்சப்படி இணைப்பு

24-9-14 அன்று நமது தலைவர்கள் தொலைத்தொடர்புத்துறை DDG (ESTT),Dirctor ஆகியோரைச்சந்தித்தனர்.அவர்கள் சென்ற முறை தாமதத்தைக்குறைக்க மந்திரி சபை ஒப்புதல் பெற முக்கிய நான்கு துறைகளான நிதி, சட்டம்,ஊழியர்கள்,கனரகத்துறை ஆகியவற்றில் ஒரே நேரத்தில் பரிந்துரை பெற்ற்துபோல் 78.2% பஞ்சப்படி இணைப்பிலும் செய்யவேண்டினர்.
 DOT  ல் கண்டிப்பாக தாமதம் இவ்விஷ்யத்தில் இருக்காது என DDG உறுதியளித்தார்.
ஆனால் இதுவரையில் DOE லிருந்து எந்த வழிகாட்டுதலும் பெறப்படவில்லை.
27-9-2014 ல் நமது பொதுச்செயலர் ,தோ. சித்து சிங், தோ. குணசேகரன் ஆகியோர் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரின் அந்தரங்கச்செயலரை சந்தித்து 78.2% பஞ்சப்படி இணைப்பில் உள்ள காலதாமதத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். அவர் இது விஷயத்தில் தன்னால் செய்யமுடிந்ததை செய்வதாகக் கூறினார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.